search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை"

    • பிறந்தநாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    தொப்பூர், 

    தருமபுரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக தடங்கம் சுப்பிரமணி செயல்பட்டு வருகிறார்.

    இன்று அவருடைய 65-வது பிறந்த நாளை முன்னிட்டு தடங்கம் பகுதியில் சிறப்பாக கொண்டாடுவதற்கு தடங்கம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் தலைமையில் மாரியம்மன் கோவிலில் அவருடைய பிறந்தநாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    தடங்கத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வந்த மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். அதன் பின்னர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரம் பூஜைகள் அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து மாரியம்மனை தரிசனம் செய்தார்.

    தொண்டர்களால் பிறந்த நாளுக்காக கொண்டுவரப்பட்ட கேக்கினை வெட்டி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ×